2022 ஆம் ஆண்டிற்கான “கன்னட தேசிய குவெம்பு விருது” – எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிப்பு!
சிறந்த எழுத்தாளர்களுக்கு கன்னட தேசிய குவெம்பு விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான “கன்னட தேசிய குவெம்பு விருது” எழுத்தாளர் இமையத்துக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
குவெம்பு விருது:
குவேம்பு என்ற புனைப்பெயரால் சுருக்கமாக கே.வி.புட்டப்பா என அழைக்கப்படுபவர் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா. இவர் எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராக போற்றப்பட்டார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்களுக்கு கன்னட தேசிய குவெம்பு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்த விருது எழுத்தாளர் இமையத்துக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கண் நோயை தொடர்ந்து வேகமெடுக்கும் தட்டம்மை பாதிப்பு – அச்சத்தில் மக்கள்!
Exams Daily Mobile App Download
மேலும் எழுத்தாளர் இமையம் யதார்த்தவாத எழுத்தின் முக்கிய படைப்பாளியாக இருக்கிறார். இவர் இதுவரை 11 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இவரின் ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘செல்லாத பணம்’ ஆகிய நாவல்கள் நல்ல அங்கீகாரம் பெற்றவை. இவரின் ‘பெத்தவன்’ சிறுகதை தமிழில் அதிகம் அச்சிடப்பட்ட கதைகளில் ஒன்றாக இருக்கிறது. இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ‘செல்லாத பணம்’ நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. மேலும் அவருக்கு கன்னட தேசிய குவெம்பு விருதுடன் ரூ. 5 லட்சம் ரொக்க பணமும் கிடைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.