தேசிய கல்விக்கொள்கை மாணவர்களிடையே இடைநிற்றலை அதிகரிக்கும் – தமிழக அரசு!
தற்போதைய கல்வி முறைக்கு இடையூறாக உள்ள மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேசிய கல்விக்கொள்கை
இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை பின்பற்றும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தேசிய கல்விக் கொள்கை திட்டம். இந்த திட்டம் மத்திய அமைச்சரவையால் கடந்த 2020 ஜூலை 29 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய கல்விக் கொள்கையானது முந்தைய தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக வரும் காலங்களில் நடைமுறைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த கல்விக் கொள்கையானது வரும் 2030ம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதுவரை இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் வெவ்வேறு வகையான கல்வித்திட்டங்களை மாணவர்களுக்கு வகுத்துள்ளது. அந்த வகையில் மாநிலங்களுக்கான கல்வித்திட்டங்களை சரிவர கற்றுக்கொள்ள முடியாமல் பலர் பள்ளியில் இருந்து இடை நின்றும் வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை அமல்படுத்துவதில் எந்தவொரு நன்மையும் இல்லை என்று சில மாநில அரசுகள், மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது…!
இருப்பினும் இந்த தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் இப்போது வரை மத்திய அரசு தெளிவான முடிவில் இருந்து வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் தமிழக அரசு, தற்போதைய கல்வி முறைக்கு இடையூறாக இருக்கும் தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில் ஆஜரான தமிழக அரசு இந்த பதிலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்