தேசிய நல்லாசிரியர் விருது 2021 அறிவிப்பு – தமிழகத்தில் 2 ஆசிரியர்கள் தேர்வு!
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்தது. தற்போது விருது பெற இருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருது:
சிறந்த பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறது. அதற்காக ஆசிரியர் பணியில் இருந்து, இந்திய நாட்டிற்கே குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்லாசிரியர் விருதையும் அவரின் பெயரிலேயே மத்திய அரசு வழங்குகிறது.
மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழக்கு – ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு!
இந்த விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், வெளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை குடியரசுத் தலைவரால் டெல்லியில் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். நடப்பாண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. தற்போது தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 44 ஆசிரியர்களை மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.