பள்ளி & கல்லூரி மாணவர்கள் தினமும் காலை தேசிய கீதம் கட்டாயம் – கர்நாடக அரசு அதிரடி!
மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் தேசிய கீதம் பாடப்படுவது படிப்படியாக குறைந்துவரும் காரணத்தினால் மாணவர்கள் கட்டாயமாக தினமும் காலை பிராத்தனையின் பொழுது தேசிய கீதம் பாட வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதம்:
இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை பிரார்த்தனையின் பொழுது தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலை பிராத்தனையின் போது மாணவர்கள் தேசியகீதம் பாடப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூருவில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் சென்று விசாரணை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.20) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதாவது, பெங்களூரு வடக்கு மற்றும் தெற்குப் பிரிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும் சென்று பொதுக்கல்வித் துறையின் துணை இயக்குநர்கள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் காலை பிரார்த்தனையின் பொழுது மாணவர்கள் தேசிய கீதம் பாடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கர்நாடகா கல்விச் சட்டத்தின் 133(2) பிரிவின் கீழ் ஒரு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவிற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, கட்டாயமாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தினமும் காலை பிராத்தனையின் பொழுது தேசிய கீதம் பாட வேண்டும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. பொது பிரார்த்தனைக்கு போதிய இடம் இல்லையெனில் வகுப்பறையிலாவது காலையில் தேசிய கீதம் பாட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பின்படி பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் காலை 11 மணிக்கு தேசியகீதம் பாடப்பட்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்