உலகின் முதல் நாசி வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி அறிமுகம் – மருந்தின் விலை ரூ.800!
இந்தியாவில் நாசி வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்துக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு. மக்களுக்கு செலுத்தப்பட்டது. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் மக்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
Zomato-வில் 800 காலிப்பணியிடங்கள்.. வேலைவாய்ப்பு வழங்க நிறுவனம் போட்ட கண்டிஷன்! ஷாக் தகவல்!
இதன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிய தொடங்கியது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் எனும் தடுப்பூசியும் செலுத்தப்பட தொடங்கியது. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் நாசி வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியது.
இந்த மருந்துக்கு தற்போது மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இன்கோவாக் தடுப்பூசியானது கொரோனா வைரஸ் தொற்று உருவாகும் இடத்தில் இருந்து எதிர்ப்பு திறனை உருவாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய மருந்தை மாநில அரசுகளுக்கு ரூ.325 க்கும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.800 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.