‘பாக்கியலட்சுமி’ தொடரில் இருந்து இதனால் தான் விலகினேன் – நந்திதா ஜெனிஃபர் ஓபன் டாக்!
பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜெனிபர் தொடரில் இருந்து விலகியதற்கான உண்மை காரணத்தை வெளியிட்டுள்ளார்.
நந்திதா ஜெனிபர்:
சீரியல்களின் வெற்றிக்கு அன்றாட வாழ்வில் நடக்கும் கதையம்சம் இருந்தாலே போதும், சீரியல் ஹிட் வரிசைக்கு சென்று விடும். அந்த வகையில், ஆரம்பித்த புதிதில் அவ்வளவு வரவேற்பு இல்லாமல் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி. கதையின் நாயகி பாக்கியா தனது குடும்பத்திற்காக மிகவும் சிரமமப்படுவதாகவும், அதற்கு குடும்பத்தில் பாதி பேர் சப்போர்ட் செய்வது போலவும், பாதி பேர் எதிர்ப்பது போலவும் உள்ளது.
ஹேமாவை வேண்டாத பொருள் என்று கூறும் அஞ்சலி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி என்ற கேரக்டரில் நடிகை சுசித்ரா ஷெட்டி நடித்து வருகிறார். இவரது கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகிறார். இவரது காதலியாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நந்திதா ஜெனிபர் நடித்து வந்தார். கோபியும், ராதிகாவும் நண்பர்களாக பழகி வருகின்றனர். ஆனால் கோபி இதை பற்றி தனது குடும்பத்திற்கு தெரியாமல் மறைக்கிறார். இதேபோல், எதிர்பாராத விதமாக பாக்கியாவும், ராதிகாவும் நெருங்கிய தோழிகளாக மாறி விடுகின்றனர்.
ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் இந்த தொடரில் தனது நடிப்புத்திறனால் அதிகமான ரசிகர்களை கவர்ந்தார். பாக்கியாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அந்த அளவிற்கு ராதிகாவிற்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். திடீரென்று இந்த தொடரில் இருந்து ஜெனிபர் விலகி விட்டார். அந்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 3-ல் பங்கேற்ற ரேஷ்மா நடித்து வருகிறார். தொடரில் இருந்து விலகியதற்கான உண்மை காரணத்தை தற்போது ஜெனிபர் வெளியிட்டுள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’ பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாக்கும் ரசிகர்கள்!
அதில் அப்பாவித்தனமாக, சாந்தமாக சென்று கொண்டிருந்த ராதிகா கேரக்டர் இனி வில்லத்தனம் செய்ய போவது போல் காட்சிகள் வர உள்ளது. எனவே வில்லத்தனமான வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே தான் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகினேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் சீரியலை விட்டு விலகியவுடன் ஏராளமான கமெண்டுகள் மீண்டும் தொடர்ந்து நடிக்க வலியுறுத்தி வந்தது. நந்திதா மேலும், விரைவில் மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.