இந்தியாவில் AIIMS மருத்துவமனைகளுக்கு பெயர் தேர்வு – முக்கிய தகவல் வெளியீடு!

0
இந்தியாவில் AIIMS மருத்துவமனைகளுக்கு பெயர் தேர்வு - முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் AIIMS மருத்துவமனைகளுக்கு பெயர் தேர்வு - முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் AIIMS மருத்துவமனைகளுக்கு பெயர் தேர்வு – முக்கிய தகவல் வெளியீடு!

இந்தியாவில் மதுரை உட்பட நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பெயர் தேர்வு செய்வதில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த பெயர் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சின்னங்களின் அடிப்படையில் பெயர்கள் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனைகள்:

இன்றைய காலகட்டத்தில் மருத்துவம் என்பது மிக முக்கியமான சேவையாக கருதப்படுகிறது. ஏனென்றால் நாட்டில் உருவாகும் புது புது நோய்கள் மக்களை மிகவும் அச்சத்திற்கு ஆளாக்குகிறது. இதனால் மக்கள் முதலில் மருத்துவத்தை தேடியே செல்கின்றனர். நாட்டில் மருத்துவம் மிக சிறந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலக தரம் வாய்ந்த மருத்துவ முறைகள் தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரவி வந்த கொரோனா நோய் பரவல் மக்களை மிகவும் பாதித்தது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சியால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் நாட்டில் மருத்துவ தேவைகளும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நாட்டில் புதிதாக மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அரசு காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் தற்போது தமிழகம் முழுவதும் நகர்ப்புற சுகாதார மையங்கள், மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 4,300 மருத்துவ பணியிடங்கள் வருகிற செப்டம்பர் மாதம் நிரப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,586 பேருக்கு தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை ஷாக் ரிப்போர்ட்!

இந்த நிலையில் இந்தியாவில் மதுரை உட்பட 23 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. இதனை அடுத்து இந்த மருத்துவமனைகளுக்கு பெயர் தேர்ந்தெடுப்பது குறித்து ஒன்றிய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. மேற்கண்ட 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அந்தந்த மாநில வீராங்கனைகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள், வரலாற்று சின்னங்களின் அடிப்படையிலான பெயர்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மூன்று அல்லது நான்கு பெயர்களை பரிந்துரைக்க மாநில அரசிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!