ஆதார் கார்டில் பெயர் திருத்தம், சேர்க்கை செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
ஆதார் கார்டில் பெயர் திருத்தம், சேர்க்கை செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
ஆதார் கார்டில் பெயர் திருத்தம், சேர்க்கை செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
ஆதார் கார்டில் பெயர் திருத்தம், சேர்க்கை செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதாா் சோ்க்கை மற்றும் தேவையான அப்டேட்களை செய்வதற்கான சிறப்பு முகாம் அஞ்சல் நிலையங்களில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் முகாம்:

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கார்டு மத்திய அரசின் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆதார் கார்டு நீல நிறத்தில் இருக்கும் அது பால் ஆதார் எனப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வழங்க பிறப்பு சான்றிதழ் அவசியமாகும். குழந்தைக்கு 5 வயது ஆகும் போது குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும். இந்த ஆதார் அட்டை ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை போன்றவை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அனைத்து அரசு, தனியார் நிறுவன வேலைகளுக்கும் மற்றும் தனிநபர் சார்ந்த வேலைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் இதனை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்து கொள்ள வேண்டும். முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் மொபைல் எண் போன்ற விவரங்களை நாம் எளிதாக UIDAI இணையதளம் வாயிலாக மாற்றலாம். மேலும் புகைப்படம் மாற்றுதல், கைரேகை பதிவு போன்றவைகளை நாம் நேரடியாக ஆதார் சேவை மையத்தில் தான் மாற்ற வேண்டும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அஞ்சல் அலுவலகத்திலும் ஆதாரில் விவரங்களை மாற்றலாம். அதன் படி ராமநாதபுரத்தில் ஆதாா் சோ்க்கை மற்றும் ஆதாரின் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

JIPMER பல்கலைக்கழகத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – ரூ.67,700/- ஊதியம்..!

அம்மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இரு தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் கமுதி, ராஜசிங்கமங்களம், கீழக்கரை, முதுகுளத்தூா், ராமேஸ்வரம் ஆகிய 29 தபால் நிலையங்களிலும் மே 30 ஆம் தேதி வரையில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. புதிதாக ஆதாா் அட்டை எடுக்க விரும்புவோர், இலவசமாகவும், ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோர் ரூ.50 கட்டணம் செலுத்தி அப்டேட் செய்யலாம் என்று அம்மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அஞ்சலகத்தின் செல்வமகள், பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் சேரலாம் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!