தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் – அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தலைமையேற்ற நாள் முதல் அரசின் அனைத்து துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. பல்வேறு சட்ட முன்வடிவுகள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதனை தொடர்ந்து அரசு துறையில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இதில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் இட ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!
அதனை தொடர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக மாநில வளர்ச்சி கொள்கை குழு அமைக்கப்பட்டது. 2020ம் ஆண்டு மாநில வளர்ச்சி கொள்கை குழு திருத்தியமைக்கப்பட்டது. கடந்த மாதம் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பெயர் மாநில திட்ட ஆணையம் என மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா உறுதி – பள்ளிகளை மூட வாய்ப்பு?
கடந்த 1ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இனி வரும் காலங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என்றும் இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.