தமிழக பாண்டமங்கலம் பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !
தமிழகத்தில் நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 04.09.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவனம் | தமிழக பாண்டமங்கலம் பேரூராட்சி |
பணியின் பெயர் | துப்புரவு பணியாளர் |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 04.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
துப்புரவு பணியாளர் பதவிக்கு 2 பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 21க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதி:
எழுத படிக்க தெரிந்த அனைவரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 07.09.2020 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் 04.09.2020 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி வரை “செயல் அலுவலர், பாண்டமங்கலம் பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம்” என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.