சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ரக்ஷா – அதுவும் இந்த சேனலில்!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக இருந்த சீரியல் நாயகி மீண்டும் வேறு ஒரு சேனலில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். முன்பை விட இது மாறுபட்ட கதாபாத்திரமாக இருக்கும் என்று ப்ரோமோவில் இருந்து தெரிகிறது.
அதிரடி ரீ என்ட்ரி:
தினமும் சீரியல் பார்க்காவிட்டால் சிலருக்கு அந்த நாளே ஓடாதது போல் இருக்கும். சீரியல் என்பதை தாண்டி நடிகர்களை குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்களுக்கு தங்களது முழு ஆதரவையும் மக்கள் தெரிவிக்க தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கான நடிகர்களின் கச்சிதமான நடிப்பும் சீரியல் ஹிட் ஆக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு ஹிட் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் மாற்றப்பட்டால் சில ரசிகர்கள் கொந்தளிக்கும் அளவிற்கு ரசிகர்களின் ஆதரவு உள்ளது.
TN TRB போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு!
அந்த வகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பல சேனல்களிலும் பல முக்கிய தொடர்கள் நிறுத்தப்பட்டது. இது தவிர்க்க முடியாத காரணமாகி விட்டது. அந்த வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தேவி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரக்ஷா கர்நாடகத்தை சேர்ந்தவர். தமிழில் இவர் அறிமுகமானதே இந்த தொடரின் மூலம் தான். இந்த தொடரில் நாயகனுக்கு இரு வேடம் அதில் ரவுடியாக இருக்கும் மாயனுக்கு ஜோடியாக ரக்ஷா நடித்திருந்தார். சாதாரண பெண்களை போல் அல்லாமல் மிகவும் கம்பீரமாகவும், திறமைசாலியாகவும் அவரது அப்பாவின் தொழிலை நடத்தும் பெண்ணாக நடித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
இவரது மிடுக்கான நடிப்பிற்கு, மாயன் தேவி ஜோடிக்கும் என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஊரடங்கினால் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கட்டுப்பாடுகள் நீங்கி படப்பிடிப்பு தொடங்கும் போது பெங்களூரில் இருந்து ரக்ஷாவால் சென்னைக்கு வர முடியவில்லை. இதனால் சீரியல் முடங்கியது. ஆனால் அதே பெயரில் வேறு கதையுடன் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் ரக்ஷாவின் ரசிகர்கள் அவரை டேக் செய்து மீண்டும் தமிழில் நடிக்க வலியுறுத்தினர். இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அன்பே சிவம்’ என்ற புதிய தொடரில் ரக்ஷா நடிக்க இருக்கிறார். அதன் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.