NALCO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடம் நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் ADVISOR (FOREST & ENVIRONMENT) பதவிக்கு என்று காலியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் தொகுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Aluminum Company Limited (NALCO) |
பணியின் பெயர் | ADVISOR (FOREST & ENVIRONMENT) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NALCO காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, ADVISOR (FOREST & ENVIRONMENT) பதவிக்கு என்று மொத்தம் ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு துறையில் Bachelor’s Degree முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NALCO அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசின் Forest & Environment Department ல் Chief Conservator அல்லது அதற்கு மேல் உள்ள பதவியில் குறைந்தது 20 வருட பணி அனுபவம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
வயது விவரம்:
30.06.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 64 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
NALCO ஊதிய விவரம்:
இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட பதிவுதாரர்கள் ரூ.60,000/‐ முதல் ரூ.80,000/‐ வரை மாத ஊதிய தொகையுடன் கூடுதல் தொகையும் பெறுவார்கள். கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
TNPSC Coaching Center Join Now
தேர்வு செய்யப்படும் முறை:
பதிவுதாரர்களின் தகுதி மற்றும் அனுபவங்கள் பொறுத்து Shortlisted செய்யப்படுவார்கள், அதன்பின் தகுதியானவர்கள் நேர்காணல் வாயிலாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
NALCO விண்ணப்பிக்கும் முறை:
உப்பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.