நைனிடால் வங்கியில் 150 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தனியார்துறை வங்கியான நைனிடால் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் அனுப்ப ஜூலை 31 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வங்கி வேலைவாய்ப்பு:
நைனிடால் வங்கியில் காலியாக உள்ள 150 Management Trainees (MTs) & Clerks பணிகளுக்கு அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தகுதியும், விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த வங்கி கோவிந்த் வல்லப பந்த் மற்றும் ஷா சமூகத்தினரால் 1922 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் இந்த வங்கி இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியின் துணை வங்கியாகும்.
TN Job “FB Group” Join Now
இந்த வங்கியில் Management Trainees (MTs) பணிக்கு 75 பணியிடங்களும், Clerk பணிக்கு 75 பணியிடங்களும் என மொத்தம் 75 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு Management Trainees (MTs) பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 27 வரை ஆகும். Clerks பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 ஆகும். மேலும் கல்வித் தகுதியாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation / Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Computer Operations பணிகளில் தேவையான திறன்களை பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,900/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் Online Written Examination மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம். மேலும் விண்ணப்ப கட்டணமாக Management Trainees பணிக்கு ரூ.1500 மற்றும் Clerk பணிக்கு ரூ.1,500 ஆகும். இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் 17.07.2021 முதல் 31.07.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.