வங்கி வேலை வேண்டுமா? நைனிடால் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – தேர்வு கிடையாது!
IT Officers பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை நைனிடால் வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 63840/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | நைனிடால் வங்கி |
பணியின் பெயர் | IT Officers |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | offline |
நைனிடால் வங்கி காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி IT Officers பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IT Officers கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E. / B.Tech./ Post Graduate / MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என டத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
நைனிடால் வங்கி வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இந்திய விமானப்படை Agniveer வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/-
IT Officers ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Rs.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைனிடால் வங்கி விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1500/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
IT Officers தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.11.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.