தனியார் வங்கியில் 100 கிளார்க் காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க பிப்.15 கடைசி நாள்..!
நைனிடால் வங்கி லிமிடெட் நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Management Trainees (MTs) and Clerk பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களுக்கு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Nainital Bank வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சமீபத்தில் வெளியாகியுள்ள நைனிடால் வங்கி லிமிடெட் நிறுவனத்தின் அறிவிப்பின் படி Management Trainees, Clerk பணிக்கென மொத்தம் 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Management Trainees பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduation / Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Clerk பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduation / Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 31.12.2021 ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Management Trainee பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 30,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
- Clerks பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550- 1730/7-42660-3270/1-45930-1990/1-47920 என்னும் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Management Trainees மற்றும் Clerks பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nainital Bank விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். 15.02.2022 ம் தேதியுடன் கால அவகாசம் முடிவதால், இந்த வங்கிப் பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் உடனே இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.