முழு ஊரடங்கு உத்தரவு மார்ச் 31 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
முழு ஊரடங்கு உத்தரவு மார்ச் 31 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு உத்தரவு மார்ச் 31 வரை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
முழு ஊரடங்கு உத்தரவு மார்ச் 31 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா நோய்தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முழு ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கொரோனா பரவல் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதனையடுத்து அம்மாவட்டத்தில் மார்ச் 15 முதல் 21ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது மார்ச் 31 வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் சில தளர்வுகளும் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் பிற்பகல் 1 மணி நேரத்திற்கு மாறாக மாலை 4 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும், அதே நேரத்தில் உணவகங்கள் இரவு 7 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. உணவு டெலிவரி சேவைகள் இரவு 11 மணி வரை அனுமதிக்கப்படும்.

தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம்? இன்று 1,243 பேருக்கு கொரோனா உறுதி!!

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடப்படும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வுகள் கொரோனா வழிகாட்டுதல்களுடன் நடத்தப்படும். இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!