நாகப்பட்டினம் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020 !
நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ரேஷன் கடையில் காலியாக உள்ள நியாயவிலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 15.07.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு ரேஷன் கடை, நாகப்பட்டினம் |
பணியின் பெயர் | நியாயவிலை கடை விற்பனையாளர், கட்டுநர் |
பணியிடங்கள் | 127 |
கடைசி தேதி | 15.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை, நாகப்பட்டினத்தில் நியாயவிலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதிவிக்கு 127 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
01.01.2020 அன்று, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
- நியாயவிலை கடை விற்பனையாளர் – Rs.5000/-
- கட்டுநர் – Rs.4250/-
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக்கட்டணம் :
- நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
- கட்டுநர் – ரூ. 100 /-
- அனைத்து பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே பின்வரும் முகவரிக்கு 15.07.2020 அன்று மாலை 5.45 மணிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
மண்டல இணைப்பதிவாளர்/ தலைவர், நாகப்பட்டினம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், அறை எண் 3030, 3 – ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் – 611003.