ரூ. 35,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள DEO, Social Worker பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Health Society Nagapattinam (DHS) |
பணியின் பெயர் | DEO, Social Worker |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
DHS காலிப்பணியிடம்:
வெளியாகியுள்ள அறிவிப்பில், நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில் DEO, Social Worker, Psycologist & District Consultant பணிக்கு என்று தற்போது 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
DHS கல்வித் தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
- District Consultant பணிக்கு Public Health / Social Worker / Management பாடப்பிரிவில் Post Graduation முடித்திருக்க வேண்டும்.
- Social Worker பணிக்கு Sociology / Social work பாடப்பிரிவில் Post Graduation முடித்திருக்க வேண்டும்.
- Psycologist பணிக்கு Psychology / MSW பாடப்பிரிவில் Post Graduation முடித்திருக்க வேண்டும்.
- DEO பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation முடித்திருக்க வேண்டும்.
DHS ஊதியம் :
- District Consultant பணிக்கு ரூ.35,000/- என்றும்,
- Social Worker பணிக்கு ரூ. 13,000/- என்றும்,
- Psycologist பணிக்கு ரூ.13,000/- என்றும்,
- DEO பணிக்கு ரூ.10,000/- என்றும் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
DHS தேர்வு முறை ;
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DHS விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, அறிவிப்பில் கேட்டுள்ள ஆவணங்களை இணைத்து தபால் வாயிலாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதி நாளான 24.03.2022 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு வந்து சேர வேண்டும்.