1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
நாகாலாந்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. தற்போது கொரோனா தாக்கம் சில மாநிலங்களில் முற்றிலுமாக குறைக்கப்பட்ட காரணத்தினால் முதற்கட்டமாக உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறன்றன. பெரும்பான்மையான மாநிலங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் நாகாலாந்து மாநிலத்தில் ஏற்கனவே 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி மாதம் முதல் தொடங்கப்பட்டன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மார்ச் மாதம் 22 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
மத்திய அரசு வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை பின்பற்றுதல், கைகளை கழுவுதல், உடல் வெப்பநிலை சோதனை போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.