1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தடுப்பு நடவடிக்கை:
கோவிட்-19 பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் நாகலாந்து மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் பரவாமல் இருப்பதற்கு சுகாதாரத்துறை புதிய முறையில் அவசர கால நடவடிக்கைகளையம் வெளியிட்டுள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா நிலைமையை ஆராய்ந்து சீரமைப்பதற்கு மாநில அரசு குழுக்களை அமைத்து பணி மேற்கொண்டு வருகிறது.
ஜேஇஇ முதல் முதுநிலை நீட் வரை – ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் முழு பட்டியல்!!
ஊரடங்கு:
மாநிலம் முழுவதும் இரவு 7 மணி முதல் காலை 4 மணி வரை 4 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு உள் வரும் நபர்களுக்கு RT-PCR / TrueNat / CBNAAT என்ற சோதனைகளை மேற்கொள்ளவும், அவர்கள் 10 நாட்கள் தனிமைபடுத்துதல் அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கல்வி நிறுவனங்கள்:
நாகலாந்து மாநிலம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை மூடப்படுவதாகவும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் தொடரவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்