சமந்தா, நாக சைதன்யா மீண்டும் சேர போகிறார்களா? விவாகரத்து போஸ்டை நீக்கியதற்கான காரணம்!
தென்னிந்தியாவின் முன்னனி நடிகையாக உள்ள சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டா பதிவில் தனது விவாகரத்து பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தார். தற்போது அதை அவர் நீக்கியுள்ளதால் இவர்கள் மீண்டும் சேர போகிறார்கள் என்ற கருத்து பரவி வருகிறது.
சமந்தா விவாகரத்து:
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தென்னிந்தியா முழுவதும் அதிக பிரபலமாக மாறி இருப்பவர் நடிகை சமந்தா. இவர் முதலில் நடித்து வந்த படங்களில் எந்த வித வரவேற்பையும் பெறவில்லை. அதன்பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் அதிகம் மக்களின் கவனத்தை பெற்றார். அதன்பிறகு விஜய், சூர்யா, விக்ரம் போன்ற உச்ச நடிகர்கள் பலருடன் சேர்ந்து தமிழிலும், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து பெரிய அளவில் பிரபலமடைந்து விட்டார்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் – வைரலாகும் ப்ரோமோ!
இவர் தெலுங்கு திரையுலகில் நடித்து வந்த போது நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னரும் கூட இவர்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் திடீரென்று இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வந்தது. அதை உண்மையாகும் விதமாக சமந்தா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தனது விவாகரத்து செய்தியை தெரிவித்தார்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் செம்பருத்தி ஷபானா, மாறும் ஜோடி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கடந்த அக்டோபர் மாதம் இவர்களின் விவகாரத்தை அறிவித்த பின்னர், அதை பற்றி எந்த வித கருத்துக்களையும் இருவரும் தெரிவிக்காமல், தொடர்ந்து தங்களது பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் இவர்களின் ரசிகர்கள் தான் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாவில் தனது விவாகரத்து பற்றிய பதிவை நீக்கியுள்ளார். இதனால் இவர்கள் மீண்டும் சேர போவதாக கருத்துக்கள் எழுந்து வந்தது. ஆனால் தெலுங்கு மீடியா ஒன்று சமந்தா தனது வாழ்க்கைக்கு தேவை இல்லாத விஷயங்களை தான் நீக்கி வருவதாகவும், அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.