NABFINS நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – முழு விவரங்கள் இதோ!
சமீபத்தில் NABARD Financial Services Limited (NABFINS) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Lead Auditor, Customer Service Officer, Customer Service Executive ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
NABFINS வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், NABFINS நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Auditor, Customer Service Officer, Customer Service Executive ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் Customer Service Officer பணிக்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், Customer Service Executive பணிக்கு ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் Lead Auditor பணிக்கு 12 ம் வகுப்பு அல்லது Diploma அல்லது ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2 Wheeler மற்றும் 2 Wheeler License வைத்திருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
Customer Service Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் Customer Service Officer பணிக்கு முன்னனுபவம் இல்லாத (Freshers) நபர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Customer Service Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட MFI பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Join Our TNPSC Coaching Center
இந்த வங்கித் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் கீழே இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.