நபார்டு வங்கி தமிழக வளர்ச்சிக்காக ரூ.40,000 கோடி வழங்க திட்டம்!
விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-வது தொடக்க தின விழா நேற்று நடைபெற்றது.
நபார்டு வங்கி:
விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் 1982-ம் ஆண்டு ஜூலை 12 அன்று நிறுவப்பட்ட தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) தற்போது 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கான தொடக்க தினவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தனராக தமிழகத்தின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு பங்கேற்றார்.
நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் தொடக்கம் – மத்திய அரசு ஒப்புதல்!!
நபார்டு வங்கியானது இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தினை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் கிராம வளர்ச்சிக்காக திட்டங்களை ஊக்குவிப்பதற்கு முதலீடு மற்றும் உற்பத்தி கடன்களை வழங்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு இந்த வங்கி உறுதுணையாக உள்ளது.
இந்த வங்கியின் 40-வது துவக்க தின விழாவில் பேசிய தலைமை செயலாளர் இறையன்பு கூறுகையில், இந்த வங்கியானது கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் பல வளர்ச்சி பணிகளுக்காக ரூ.27,135 கோடி கடன் உதவி வழங்கியுள்ளது, மேலும் இந்த ஆண்டு ரூ.40 ஆயிரம் கோடி வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்த வங்கிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
பின்னர் பேசிய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ் கூறுகையில், தமிழகத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார். நபார்டு வங்கி தனது பணிகளை விரிவுபடுத்தி, ஊரக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது என நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.