முத்துராசு சாகவில்லை? மாசாணியின் மிரட்டலுக்கு ஆளாகும் மாயன் – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று ஐஸ்வர்யா மஹாவின் கையெழுத்தும், அன்று தனக்கு வந்த கடிதத்தின் கையெழுத்தும் ஒன்று தான் என்று மாயனிடம் கூறுகிறார். பின்னர், மாயனை மாசாணி மிரட்டி அனுப்புகிறார்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்
விஜய் டிவியில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று ஐஸ்வர்யா முத்துராசு காணாமல் போன அன்று தனக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அதில் இருந்த கையெழுத்தும், தற்போது மஹாவின் கையெழுத்தும் ஒன்று தான் என்பதனை உறுதி செய்கிறார். அதனை மாயனிடமும் கூறுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் மாயன், மீண்டும் அதனை உறுதி செய்து விட்டு இது குறித்து வீட்டினரிடம் பேச வேண்டாம் என்றும் கூறுகிறார்.
கண்ணம்மாவிற்கு ரோஜா செடி வாங்கி செல்லும் பாரதி – காதல் காட்சிகளுடன் வெளியான ப்ரோமோ!!
பின்னர், மாயனை உடனடியாக நேரில் வரும்படி மாசாணி போனில் அழைத்து கூறுகிறார். இதனால் கோபத்துடன் அங்கு செல்லும் மாயன், அவருடன் சண்டை போடுகிறார். பின்னர், மாசாணி மாயனிடம் ஐஸ்வர்யாவின் தாலியை எடுத்து காட்டி, இதனை போலீசிடம் ஒப்படைத்தால், அவர்கள் ஐஸ்வர்யா தான் கொலை செய்தார் என்று அவரை ஜெயிலில் போட்டு விடுவார்கள் என்று மிரட்டுகிறார். இதனால் மாயன் பயந்து தனது வீட்டிற்கு சென்று விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின்னர், மஹாவிடம் ஐஸ்வர்யா கூறியதை குறித்து கேட்டதும், மஹா கொந்தளிக்க ஆரம்பித்து விடுகிறார். தன் மேல் பழி சுமத்தி விட்டு தங்கைகளையும், அம்மாவையும் காப்பாற்ற நினைக்கிறாயா? என்று கேட்டு சண்டை போடுகிறார். இதனால் மாயனுக்கு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. அப்போது கத்தியிடம் அவர் பேசும் போது, ஒரு வேலை முத்துராசு சாகாமல், அவரை மாசாணி எங்கேயோ மறைத்து வைத்திருக்கிறானோ? என்ற பாணியில் யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.