விஜய் டிவியில் முடிவுக்கு வந்த ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2’ சீரியல் – ரசிகர்கள் கவலை!

0
விஜய் டிவியில் முடிவுக்கு வந்த 'நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2' சீரியல் - ரசிகர்கள் கவலை!
விஜய் டிவியில் முடிவுக்கு வந்த 'நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2' சீரியல் - ரசிகர்கள் கவலை!
விஜய் டிவியில் முடிவுக்கு வந்த ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2’ சீரியல் – ரசிகர்கள் கவலை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல சீரியல் மத்தியில் நல்ல கதைக்களத்துடன் ஹிட் கொடுத்த நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் 2 கடந்த சில நாட்களாக டிஆர்பி ரேட்டிங் கீழே இறங்கிக் கொண்டே வந்தது. ஆனாலும் ஓரளவு கதையை இழுத்து கொண்டு வந்த இயக்குனர் தற்போது தொடரை சுமூகமாக முடித்துள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்’ கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், இதன் ஆரம்பகால கதைக்களம் வேறு ஒன்றாக இருந்தது. இந்த சீரியலின் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த சின்னத்திரை நடிகர் செந்தில் இரு வேடங்களில் தோன்றி மாஸ் காட்டினார். இது சீரியலில் புதிது என்பதால் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இருப்பினும், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டவே, சீரியலை தொடர்ந்து ஒளிபரப்புவதில் சிரமம் ஏற்பட்டது.

TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!

சில மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டு, சீரியல் வெளியாகி இருந்தாலும் தொடக்கத்தில் கிடைத்த வரவேற்பு மீண்டும் கிடைக்கவில்லை. ஏனெனில் கொரோனாவிற்கு பின் சீரியலில் மொத்த கதைகளமும் மாற்றப்பட்டு டல் அடிக்கத் தொடங்கியது. இவ்வாறு ஓரளவு வெற்றியை கொடுத்த முதல் பாகம் முடிவுக்கு வர, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் பாகம் 2 படப்பிடிப்பை சீரியல் குழு தொடங்க முடிவு செய்தது. சீரியலின் அனைத்து கதைக்களமும் மாற்றப்பட்டு ஒரு புதிய கதைக்களம், புதிய பிரச்சனை, புதிய சாவல் என புது அம்சங்களோடும், அண்ணன் மற்றும் தங்கைகளை சுற்றியே கதை மிரட்டியது. சீரியல் ரசிகர்களும் தங்கள் பேராதரவை தற்போது வரை கொடுத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த மாபெரும் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தவர் கதாநாயகன் செந்தில் அவர்களும், சரவணன் மீனாட்சி சீரியலில் மூன்று சீசனில் நடித்து ஹிட் கொடுத்த நடிகை ரட்சிதாவும் தான். அதன் பிறகு மீண்டும் டல் அடிக்க தொடங்கிய சீரியலில் இருந்து ரட்சிதா விலகினார். இவ்வாறு டிஆர்பியில் இறங்கிக்கொண்டே வந்த சீரியல் ஓரளவு கதையை இழுத்து கொண்டு வந்து தற்போது தொடரையும் அழகாக முடித்துள்ளார்கள். ஒரு வழியாக மகா, மாயனுக்கு குழந்தை பிறக்க, அவரது தாயார் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு வீட்டிற்கு வருகிறார். அதன்பின் குழந்தையை தொட்டிலில் போடும் காட்சியோடு தொடர் சுமுகமாக முடிவுக்கு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!