செத்து விடுவதாக கூறும் நாச்சியார், மஹா கூறும் யோசனை – வெளியான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ப்ரோமோ!
விஜய் தொலைக்காட்சியில் பல வித பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சேரியலான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்
விஜய் டிவியில் பல வித மாறுபட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் தான். இதில் தற்போது அண்ணன் தம்பியான மாறன் மற்றும் மாயன் இருவரும் எதிராக சண்டையிட்டு வருகின்றனர். தற்போது கோவிலில் இருவரும் யாருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சண்டையிட்டு வருகின்றனர். இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நாச்சியார் தான் பொங்கல் வைக்க செல்கிறார். ஆனால், தான் தான் இந்த முறை பொங்கல் வைப்பேன் என்று சாரதா கூறுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை வருகின்றனர்.
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் லிஸ்ட் – இணையத்தில் வைரல்! உண்மையா?
இதற்கு தீர்வு காணும் வகையில் யார் வைக்கும் பொங்கல் முதலில் பொங்குகிறதோ அவர்களது பொங்கலை தான் கடவுளுக்கு வைக்க வேண்டும் என்று கூறி விடுகின்றனர். இதனை கேட்டு விட்டு நாச்சியார் மற்றும் சாரதா இருவரும் வேகமாக பொங்கலை வைக்கின்றனர். ஆனால்,இறுதியில் சாரதா வைக்கும் பொங்கல் முதலில் பொங்கி விடுகிறது. அனைத்து விஷயங்களும் சாரதாவிற்கு சாதகமாக இருப்பதால் நாச்சியார் அதனை சொல்லி மஹாவிடம் வருத்தப்படுகிறார்.
பிரபல பெண் தொழிலதிபரை களமிறக்கும் பிக் பாஸ் – சூடு பிடிக்குமா நிகழ்ச்சி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
தனக்கு இந்த முறை சேலை கிடைக்கவில்லை என்றால் தான் உயிரை விட்டு விடுவேன் என்று கூறுகிறார். இதனை கேட்டு விட்டு அனைவரும் அவரை சமாதானம் செய்கின்றனர். பின்னர், மகா வந்து மாயனிடம் அத்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் பொய்யாக சாமி ஆட சொல்லுகிறார். அதனை மாயன் தான் செய்ய வேண்டும் என்றும் கூறி விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.