விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – மகாவின் முடிவு என்ன?
விஜய் டிவியில் நடிகர் மிர்ச்சி செந்தில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில், மகா சிக்கலான முடிவை எடுக்க இருப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
நாம் இருவர் நமக்கு இருவர்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பார்க்க பலர் இருக்கின்றனர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். மோனிஷா, சபிதா ஆனந்த், பிக்பாஸ ராஜூ, மிர்ச்சி செந்தில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த கதை இரட்டையர்களான அண்ணன் தம்பிகளை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது.
‘பாம்புபிடி மன்னன்’ வாவா சுரேஷின் வாழ்க்கையில் நடந்த திகிலூட்டும் சம்பவங்கள் – ஆச்சரிய தகவல் இதோ!
சிறுவயதில் தனது தம்பி மாறனுடன் அம்மா வெளிநாடு சென்று விட்டதால், தாய்மாமா அரவனைப்பில் வளரும் மாயன், தனது அப்பா 2-வது திருமணம் செய்துகொண்டதால் கோபத்தில் இருக்கிறான். ஒரு கட்டத்தில் அப்பா பற்றி புரிந்துகொள்ளும் மாயன் அவரை இழந்துவிட தனது அப்பாவின் 2-வது மனைவி மற்றும் 3 தங்கைகளை தனது பொறுப்பில் ஏற்றுக்கொள்கிறார். அதன் பின் தாய்மாமாவின் மகள் மகாவை திருமணம் செய்து கொள்ள கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.
விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கிக்கு நடந்த சோகம் – அவருடைய அம்மா சொன்ன தகவல்!
ஆனால் மாயனை பற்றி புரிந்துகொள்ளும் மகா அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில் தற்போது மகா இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மகாவின் அப்பா மாயன் உன்க்கு செய்த நல்லதை நினைத்துப்பார் அவனுடன் சேர்ந்து வாழு என்று சொல்கிறார். ஆனால் மகாவின் அம்மா என்னைக்கா இந்தாலும் அவன் யாரையாவது குத்திவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவான் அப்போது நீ தனியாதான் இருக்க வேண்டும் என சொல்ல மகா குழப்பத்தில் இருக்கிறார்.