முத்துராசை கொலை செய்தது யார்? சூடு பிடிக்கும் போலீஸ் விசாரணை – வெளியான ” நாம் இருவர் நமக்கு இருவர்” ப்ரோமோ!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் பரபரப்பான திருப்பங்களுடன் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
“நாம் இருவர் நமக்கு இருவர்”:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் முத்துராசை கொலை செய்தது யார் என்ற கேள்வியுடன் எபிசோட்கள் நகர்ந்து கொண்டு வருகிறது. முத்துராசை கொலை செய்தவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தற்போது அதிரடியான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் விறுவிறுப்பாக போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 5 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
அதில் முத்துராசு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், போலீசார் விசாரணை நடத்தி வருவதாக காட்டப்படுகிறது. மேலும் முத்துராசு உடல் கிடைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த சீரியலிலும் காட்டப்படாத அளவிற்கு திரில்லர் படம் போல காட்டப்படுகிறது. முத்துராசை கொலை செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்திரலேகாவை எதிர்க்கும் தமிழின் அம்மா – ‘தமிழும் சரஸ்வதியும்’ புதிய ப்ரோமோ!
போலீசார் விசாரணையில், மாயன், நாச்சியார், ஐஸ்வர்யா, காயத்ரி, சரண்யா, கத்தி, மகா, சிதம்பரம் ஆகியோர் மீது சந்தேகம் திரும்பி உள்ளது. இந்த வாரம் முத்துராசு கொலை குறித்த மர்மம் அவிழும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.