முத்துராசை கொலை செய்தது மஹாவும், கத்தியும்? அதிர்ச்சியில் மாயன் – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாசாணி வீட்டில் முத்துராசு இறந்ததற்கான வேறு ஏதுனும் ஆதாரங்கள் இருக்கின்றதா? என்பதனை பார்க்க கத்தி மற்றும் மாயன் இருவரும் மாறுவேடத்தில் அவரது வீட்டிற்கு செல்கின்றனர்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாயன் மற்றும் கத்தி இருவருக்கும் முத்துராசு உயிரோடு இருக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்று சந்தேகம் எழுகின்றது. இதனை தீர்க்க இருவரும் மாசாணி வீட்டில் சென்று ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா? என்று சோதனை செய்ய மாசாணி வீட்டிற்கு செல்ல முடிவு எடுக்கின்றனர். பின், இருவரும் கொரோனா கால முன்களப் பணியாளர்கள் போல உடை அணிந்து செல்கின்றனர்.
நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ திரைப்பட ட்ரைலர் வெளியீடு – OTT ரிலீஸ்!
அங்கு அவரது வீட்டில் சென்று முத்துராசு பற்றிய ஆதாரங்களை தேடுகின்றனர். ஆனால், அங்கு எதுவுமே கிடைக்கவில்லை. பின், ஒரு ரூமை மட்டும் திறக்க முடியாமல் திணறுகின்றனர். அங்கு ஒருவருக்கு காலில் அடிபட்டு, அவரை முழுதாக போர்வையால் பொத்தி வைத்து இருக்கின்றனர். இருவரும் திடுக்கிட்டு, போர்வையை திறந்து பார்க்கும் போது அங்கு ஒரு வயதானவரை படுக்க வைத்துள்ளனர்.
இதனால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர், அப்போது மாசாணி வந்து விடுவதால் இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று விடுகின்றனர். மாயன் வீட்டில் மஹாவிற்கு குளிர் காய்ச்சல் வந்து விடுகிறது. அவருக்கு தேவையானதை மாயன் பார்த்து செய்கிறார். அப்போது அருகில் மாயன் இருப்பதை உணராத மஹா அவரை கட்டியணைத்து தூங்குகிறார்.
TN Job “FB Group” Join Now
பின்னர், காலையில் கத்தி தான் சார்ஜர் எடுக்க மாயன் அறைக்கு வந்ததாகவும், அப்போது இருவரும் இருக்கும் நிலையினை பார்த்து விட்டதாகவாகவும் கூறுகிறார். இதனால் மாயன் அதிர்ச்சி அடைந்து காயத்ரி மற்றும் கத்தி இருவரையும் திட்டுகிறார். அப்போது மஹா வந்து விடுவதால் காயத்ரி தான் மஹாவை கட்டி இரவு பார்த்து கொண்டதாக மூவரும் கூறி விடுகின்றனர்.
பின்னர், மஹா மற்றும் கத்தி இருவரும் முத்துராசு மரணம் குறித்து பேசுகின்றனர். அப்போது மஹா தான் கடைசியாக முத்துராசை பார்த்த போது அவர் உயிரோடு இருந்ததாகவும், தான் முத்துராசை கொல்லவில்லை என்றும் கூறுகிறார். அதே போல் கத்தி தானும் முத்துராசை கொல்லவில்லை என்று கூறுகிறார். தனக்கு ஒரு சில விஷயங்கள் தான் இந்த கொலை குறித்து தெரியும் என்றும், அதனை கூட தான் மாயனிடம் கூறவில்லை என்று கூறுகிறார். இப்படி இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை தூரத்தில் இருந்து மாயன் பார்த்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகின்றது.