முத்துராசை கொலை செய்த கத்தி? சந்தேகம் அடையும் மாயன் – இன்றைய ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ எபிசோட்!
விஜய் டிவியில் தற்போது பரபரப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாயன் காயத்ரியிடம் கொலை சம்பவம் பற்றி கேட்கிறார்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று சரண்யா மாயனை தனது அண்ணனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகிறார். இதனால் கோபம் அடைந்து விடும் நாச்சியார் மாயன் அமைதியாக இருந்து கொண்டு இருப்பதால் தான் தாங்கள் நிம்மதியாக இருக்க முடிகிறது என்று கூறி விட்டு சென்று விடுகிறார். பின், மாயன் மஹாவிற்கு என்று அவருக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கி வருகிறார். இதனை அப்படியே கொடுத்தால் கண்டிப்பாக அண்ணி சாப்பிட மாட்டார் என்று காயத்ரி கூறியதும், பொய் சொல்லி மஹாவை மாயன் சாப்பிட வைத்து விடுகிறார்.
நடிகர் விஜயின் சொகுசு கார் வழக்கு அபராதத்துக்கு இடைக்கால தடை – காரசார விவாதம்!
அப்போது காயத்ரியின் கணவர் வந்து அந்த உணவுகளை மாயன் தான் செய்தார் என்று கூறி விடுகிறார். இதனால் குழப்பம் அடையும் அவர், மஹாவிடம் உண்மையை கூறி விடுகிறார். இதனால் மஹா அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பின், மாசாணி மற்றும் வடிவு இருவரும் காயத்ரி, ஐஸ்வர்யா மற்றும் சரண்யா மூவருக்கும் துப்பாக்கி சுட தெரியும் என்பதனை கூறி விடுகிறார். இதனால் மாசாணி அதிர்ச்சி அடைந்து வடிவை திட்டுகிறார். இத்தனை வருடங்களாக இது கூட தெரியாமல் எப்படி எந்த வீட்டில் இருந்தாய்? என்று கேட்கிறார். பின், இருவரும் கொலை வழக்கு பற்றி பேசி கொள்கின்றனர்.
வீட்டில் ஒரு துப்பாக்கி இருப்பதனை பார்க்கும் காயத்திரி அதனை எடுத்து பார்க்கிறார். நேராக குறி வைக்கும் போது மாயன் வந்து விடுகிறார். பின், மாயன் காயத்ரி மற்றும் அவரது கணவரிடம் முத்துராசு கொலையான அன்று என்ன நடந்தது? என்று கேட்கிறார். காயத்ரி தான் அன்று இரவு வெகுநேரம் முழித்து இருந்ததாக கூறுகிறார். மாயனிடம் நாச்சியார் எதோ பேச வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அப்போது ஐஸ்வர்யா வந்து தனது எக்ஸாம் குறித்து கேட்கவும், நாச்சியார் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறி விடுகிறார். ஐஸ்வர்யா நன்றாக படிக்க வேண்டும் என்றும், முத்துராசால் நடந்த விஷயங்களை மறக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
அப்போது மஹா வீட்டினரை சந்தேகப்பட்டு எழுதி இருக்கும் பேப்பரை ஐஸ்வர்யா பார்த்து விட்டு முத்துராசு இறந்ததும், அவரது போன் கிடைத்த போது இருந்த கடிதத்தில் இருந்த கையெழுத்தும், இந்த கையெழுத்தும் ஒன்றாக இருக்கிறது என்று கூறுகிறார். இதனால் மாயன் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.