முத்துராசு உயிரோடு இருப்பதாக கூறும் மாசாணி – இன்றைய “நாம் இருவர், நமக்கு இருவர்” எபிசோட்!!

0
முத்துராசு உயிரோடு இருப்பதாக கூறும் மாசாணி - இன்றைய
முத்துராசு உயிரோடு இருப்பதாக கூறும் மாசாணி - இன்றைய "நாம் இருவர், நமக்கு இருவர்" எபிசோட்!!
முத்துராசு உயிரோடு இருப்பதாக கூறும் மாசாணி – இன்றைய “நாம் இருவர், நமக்கு இருவர்” எபிசோட்!!

விஜய் தொலைக்காட்சியில் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று முத்துராசுக்கு ஈம காரியங்கள் செய்ய வடிவு, மாயன் குடும்பத்தினரிடம் கேட்கிறார். அவனது உடலையாவது தங்களிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார். டிஎஸ்பி கார்த்தி நாச்சியாரிடம் அவரது மூன்று பெண்களிடமும் விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று வடிவு தனது மகனுக்கு இறுதி காரியங்களை செய்ய வேண்டும் என்று புலம்புகிறார். தனது மகனின் ஆன்மா சாந்தி அடையாமல் தங்களை தான் பாதிக்கிறது என்று கூறுகிறார். அப்போது நாச்சியார் ஐஸ்வர்யாவின் மனநிலை குறித்து யோசித்து, இதனை வேண்டாம் என்று மறுக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் வடிவு கண்டிப்பாக இறுதி காரியங்களை செய்ய வேண்டும் என்றும், இதற்கு மாயனிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார்.

கோபியுடன் வர மறுக்கும் ராதிகா & மயூரி, சமையல் ஆர்டரில் பிசியான ஜெனி – இன்றைய எபிசோட்!

பின், ஐயரை வரவழைத்து இறுதி காரியங்களை செய்கின்றனர். அப்போது மனம் நொந்து வடிவு தனது கணவரிடம் பேசுகிறார். தங்களது மகனுக்கு தாங்களே இறுதி காரியம் செய்யும் நிலைக்கு வந்து விட்டோம் என்று வடிவு வருத்தப்படுகிறார். அப்போது அங்கு வரும் மாசாணி இறுதி காரியங்கள் செய்வதை பார்த்து கோபம் அடைகிறார். முத்துராசு உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பதே தெரியாது. இந்த நிலையில் எதற்காக இதனை செய்ய வேண்டும் என்று வடிவின் மீது கோபம் கொள்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின், முத்துராசு கேஸை விசாரிக்கும் டிஎஸ்பி கார்த்தி, ராஜரத்தினம் மற்றும் அவர்களது மூன்று பெண்களுக்கும் துப்பாக்கி சுட தெரியும் என்பதனை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். எதற்காக ராஜரத்தினம் தனது பெண்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கு கற்றுத் தர வேண்டும் என்று அவரது நண்பரை கேட்கும் போது பின்னாளில், தனது பெண்கள் தான் பிசினஸை பார்த்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்ற காரணத்தால், துப்பாக்கி சுடுவதற்கு கற்று கொடுத்ததாக கூறுகிறார். பின், கார்த்திக் மாயன் வீட்டிற்கு சென்று நாச்சியாரிடம் அவரது மூன்று பெண்களையும் விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனை கேட்டு மாயன் கொந்தளிக்கிறார். ஆனால், வடிவு அவருக்கு ஆதரவாக பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!