முத்துராசு கொலையின் முக்கிய ஆதாரத்தினை காட்டி மாயனை மிரட்டும் மாசாணி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாசாணி முத்துராசை கொலை செய்ததற்கான முக்கியமான சாட்சி ஒன்றினை காட்டி மாயனை மிரட்டுகிறார்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” தொடரில் இன்று மாயனை எதற்காக வீட்டிற்கு வந்தாய் என்று மஹா நன்றாக திட்டி விடுகிறார். பின், மாயனின் மாமியார் மற்றும் மாமனார் இருவரும் வந்து மஹாவை நன்றாக பார்த்து கொள்ளும்படி கூறுகின்றனர். பின், முத்துராசின் அம்மா வந்து அண்ணன் மாசனையிடம் தனது மகனை கொலை செய்தவர்களை கண்டிப்பாக பழி வாங்க வேண்டும் என்று கூறுகிறார். அதனை தான் பார்த்து கொள்வதாக மாசாணி கூறுகிறார்.
பழனி கோவில் & கல்வி நிலையங்களில் வேலைவாய்ப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
பின், மாயனுக்கு மீண்டும் அதே மர்ம நபரிடம் இருந்து போன் கால் வருகிறது. போன் கால் செய்து தன்னை மிரட்டுவது மாசாணி என்று மாயன் தெரிந்து கொள்கிறார். பின், அவரது வீட்டிற்கு சென்று மாயன் அவரை எதற்காக இப்படி போன் கால் செய்து மிரட்ட வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு மாசாணி தனக்கு முத்துராசு மரணத்தில் இருந்து ஒரு முக்கியமான ஆதாரம் ஒன்று கிடைத்ததாக கூறுகிறார். இதனை மாயன் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார். பின், மாசாணி அவருக்கு முத்துராசு மரணம் அடைந்த போது அணிந்திருந்த சட்டையை எடுத்து காட்டுகிறார். இதனால் உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறார், மாயன். இதனை வைத்து மாசாணி அவரை மிரட்டுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின், தனது வீட்டிற்கு வரும் மாயன் நாச்சியாரிடம் இது குறித்து பேச வருகிறார். அப்போது பின்னால் இருந்து சரண்யா அவரது கண்களை மூடுகிறார். பின், ஐஸ்வர்யா அவருக்கு பிறந்தநாள் என்று கேக் எடுத்துக் கொண்டு வருகிறார். இதனை பார்த்து விட்டு நாச்சியார் அனைவரையும் திட்டுகிறார். தற்போது இருக்கும் இந்த நிலையில் இவையெல்லாம் தனக்கு தேவையில்லை என்று கூறுகிறார். ஆனால், மாயன் வற்புறுத்தி அவரை கேக் வெட்ட சொல்கிறார். பின், நாச்சியார் மாயனுக்கு கேக்கின் முதல் துண்டினை எடுத்து ஊட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.