முத்துராசிற்கு கடைசியாக போன் செய்தது சரண்யாவா? இன்றைய ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று முத்துராசை அவரது அப்பா சிதம்பரம் கூட கொலை செய்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக டிஜிபி கார்த்தி சந்தேகம் அடைகிறார். பின்னர், வீட்டினர் அனைவரிடமும் முத்துராசு கொலை குறித்து விசாரிக்கின்றனர்.
இன்றைய எபிசோட்:
இன்று “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் முத்துராசை அவரது தந்தை சிதம்பரம் சந்தித்து இருக்கலாம் என்றும், இருவரும் பேசும் போது முத்துராசு அவரது தந்தையை திட்டி இருக்கலாம், அதனால் கோபம் கொண்டு சிதம்பரம் கொலை செய்திருக்கலாம் என்று டிஜிபி கூறுகிறார். ஆனால், சிதம்பரத்தை அன்று விசாரித்த போது அவர் வேலை காரணமாக தூத்துக்குடி சென்றதாகவும், அதனால் தான் கொலையினை செய்யவில்லை என்றும் கூறி இருக்கிறார். அதனை நிரூபித்து விட்டால், அவர் கொலையாளி இல்லை என்று உறுதியாக தெரிந்து விடும் என்றும் கூறுகிறார்.
காதல் பட நடிகருக்கு கொலை மிரட்டல் – டிக்டாக் பிரபலம் GP முத்து மீது காவல்துறையில் புகார்!
பின்னர், முத்துராசு உடலை உறுதி செய்ய ஐஸ்வர்யாவை அழைத்து செல்லுகின்றனர். அவர் உடலை பார்த்ததும் ஐஸ்வர்யா அரண்டு விடுகிறார். அவரது ஒரு சில அடையாளங்களை ஐஸ்வர்யாவிடம் காட்டுகின்றனர். பின்னர், கார்த்தி அவரிடம் முத்துராசு உடல் குறித்து கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா அது முத்துராசு உடல் இல்லை என்று கூறி விடுகிறார். இதனை தான் எதிர்பார்த்ததாகவும், அதனால் வடிவு மற்றும் சிதம்பரத்தை வரவழைத்து இருப்பதாக கார்த்தி கூறுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
பின்னர், கார்த்தி சென்றதும், ஐஸ்வர்யா தனது குடும்பத்தினரிடம் அது முத்துராசின் உடல் தான் என்று கூறி அழுகிறார். இதனை கேட்டு அனைவரும் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். மாயன் அனைவரிடமும் கொலை பற்றி கேட்கிறார். அப்போது சரண்யா, முத்துராசு கொலை செய்யப்பட்ட அன்று தானும் ஐஸ்வர்யாவும் முத்துராசிற்கு போன் செய்து பேசியதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.