முத்துராசை கொலை செய்தது அவரது அப்பா சிதம்பரம் தானா? இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று டிஎஸ்பி கார்த்தி வீட்டினர் அனைவரையும் தான் சந்தேகப்படுவதாகவும், ஆனால் கொலையினை கத்தி தான் செய்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று டிஎஸ்பி கார்த்தி தனக்கு சரண்யா மற்றும் ஐஸ்வர்யா இருவரின் மீதும் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். ஆனால், இருவரும் தைரியமான பெண்களாக இருந்தாலும், கொலை செய்யும் அளவிற்கு அவர்கள் இருவருக்கும் தைரியம் கிடையாது என்று கூறுகிறார். பின்னர், வீட்டினர் அனைவருக்குமே முத்துராசின் மீது கோபம் இருப்பதால் அனைவரும் கொலை செய்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் குற்றவாளி முன் வந்து தான் செய்ததை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
சரவணனன் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
இந்த குடும்பத்தில் அடுத்ததாக இருக்கும் மஹா மற்றும் கத்தி இருவருக்குமே முத்துராசு கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறுகிறார். கடைசியாக, முத்துராசு மஹாவிற்கு தான் கால் செய்து பேசி இருப்பதாகவும், அவர் சமாதானம் செய்ய கெஸ்ட் ஹவுஸ் சென்றிருக்கலாம். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு மஹா அவரை கொலை செய்திருக்கலாம் என்று கூறுகிறார். இதனை கேட்டு மாயன் அதிர்ச்சி அடைகிறார், கார்த்தி கூறுவது போல இருக்கலாமோ என்றும் யோசிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
காயத்ரியை முத்துராசு ஆரம்பத்தில் இருந்து விரும்பிய காரணத்தாலும், அவரை தொந்தரவு செய்ததாலும், அவரது கணவர் கத்திக்கு கோபம் வந்து அவர் கூட கொலையினை செய்திருக்கலாம் என்று கூறுகிறார். இவர்கள் பற்றிய தனது அபிப்ராயம் இப்படியாக இருந்தாலும், முத்துராசின் அப்பா சிதம்பரம் தனது தங்கை மகள் ஐஸ்வர்யா தந்து மகனிடம் அதிக அளவு துன்புறத்தலை சந்தித்ததால் கோபம் அடைந்து கூட கொலை செய்திருக்கலாம் என்று கூறுகிறார். இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.