முத்துராசை கொலை செய்தது மாயன் தானா? ட்விஸ்டுகளுடன் கூடிய இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாயன் குடும்பத்தினர் அனைவரிடமும் முத்துராசு கொலை சம்பவம் குறித்து விசாரிக்கிறார். பின்னர், வீட்டினர் அனைவரிடமும் போலீசார் முறையாக விசாரிக்கின்றனர்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்
இன்று “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று வீட்டினர் அனைவரிடமும் முத்துராசு கொலை குறித்து மாயன் விசாரிக்கிறார். அனைவரும் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறி விடுகின்றனர். மஹாவிடம் கேட்கும் போது தான் கொலை செய்யவில்லை என்றும், அப்படி செய்திருந்தால், தானாகவே போலீசாரிடம் சென்று சரண்டர் ஆகி இருப்பேன் என்று கூறி விட்டு சென்று விடுகிறார். வீட்டினர் அனைவரும் கத்தி மீது சந்தேகம் அடைகின்றனர். இதனால் அவர் பதறி போய் விடுகிறார். மாயன் மீண்டும் மீண்டும் அவரிடம் இது குறித்து கேட்கும் போது, கத்திக்கு கோபம் வந்து விடுகிறது. மாயனை திட்டியும் விடுகிறார்.
சமையல் போட்டியில் தோல்வி அடையும் சந்தியா, சிறப்பு பரிசு – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
பின்னர், டிஜிபி கார்த்தி வீட்டினர் அனைவரையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரணை மேற்கொள்கிறார். 5 நிமிடம் டைம் கொடுப்பதாகவும், குற்றவாளி தானே முன் வந்து கொலையினை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால், யாருமே குற்றத்தினை ஒத்துக்கொள்ளாததால், கார்த்தி தனக்கு மாயன் மீது தான் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். பின், மஹா கொலை நடந்த அன்று தான் மாயனிடம் பேசியதை நினைவு கூறுகிறார். அன்று இரவு அவருக்கு போன் செய்யும் மஹா மாயனை வெளியே செல்ல கூடாது என்று கூறுகிறார். மஹாவிடம் அப்படி கூறி விட்டு, மாயன் வெளியே சென்று விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
அவர் நேராக முத்துராசு இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் செல்லுகிறார். அங்கு போனை தரும்படி மாயன் கேட்கிறார். ஆனால், அதிகளவு போதையில் இருக்கும் முத்துராசு அவரை தள்ளி விட்டு கத்தியை வைத்து மிரட்டுகிறார். அப்போது மாயன் துப்பாக்கியை எடுத்து முத்துராசை மிரட்டுகிறார். துப்பாக்கியை வைத்து அவரை சுடுவதற்கு செல்லுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்து விடுகிறது.