மாறனை சந்திக்க மறுக்கும் மாயன், சமாதானப்படுத்தும் நாச்சியார் – இன்றைய எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாறனின் படிப்பிற்காக தான் பணம் அனுப்பியதாக நாச்சியார் அனைவரிடமும் தெரிவிக்கிறார். மாயன், மாறன் மற்றும் சாரதா என இருவர் மீதும் மிகவும் கோபத்தில் இருக்கிறார்.
“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல்
விஜய் டிவியில் பல விதமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இன்று சரண்யா வீட்டை விட்டு சீக்கிரமாக வெளியே செல்லலாம் என்று கூறுகிறார். மாறன் மற்றும் சாரதா இருவரும் தங்களை அவமானப்படுத்தவே வந்திருக்கின்றனர் என்றும் அதனால் உடனடியாக வேறு ஒரு இடத்திற்கு சென்று விடலாம் என்று கூறுகிறார். இதனை கேட்டு அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லும் நாச்சியார் தான் சில ஆண்டுகளாக மாறனின் படிப்பிற்கு பணம் அனுப்பி இருப்பதாகவும், அதனால் அவர்கள் நம்மை அவமானப்படுத்த விரும்ப மாட்டார்கள் என்றும் கூறுகிறார். மாயன் வந்ததும் நாம் வெளியே செல்லலாம் என்று கூறுகிறார்.
வடிவு தனது அண்ணன் மாசாணியிடம் மிகவும் கோபத்தில் கத்துகிறார். இனி தனக்கு வீடும் இல்லை என்று தனது மகனும் இறந்து விட்டான் என்று கூறி அழுகிறார். அப்போது சிதம்பரம் தான் நாச்சியாருக்காக சாரதா மற்றும் மாறன் இருவரையும் மிகவும் காயப்படுத்தி உள்ளதாகவும், அதனால் அவர்கள் இருவரும் நாச்சியாரின் மீது தான் கோபமாக இருப்பார்கள் என்று கூறுகிறார். இதனால் வடிவு சற்று நிம்மதி அடைகிறார். பின்னர், மாயன் மற்றும் கத்தி இருவரும் வருகின்றனர். மாறன் மற்றும் சாரதா இருவரும் வந்து விட்டதாக அனைவரும் கூறுகின்றனர். ஆனால், அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல் மாயன் பேசுகிறார். இதனால் அனைவரும் மாறனை பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனை கேட்டு கொந்தளிக்கும் மாயன் தன்னை 20 வருடங்களுக்கு முன்பாக விட்டு சென்றவர்கள் தனக்கு தேவையில்லை என்று கூறுகிறார். ஆனால், நாச்சியார் மாயனை சமாதானம் செய்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏதோ ஒரு காரணத்திற்காக தான் விட்டு சென்று இருப்பார்கள் என்று கூறுகிறார். அனைவரும் கூறியதும் மாயன் மாறனை சந்திக்க செல்கிறார். தாங்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர், கட்டியணைத்து அழுகின்றனர். மாயன் மற்றும் மாறன் இருவரும் தாங்கள் சந்தித்து வந்த கஷ்டங்களை பற்றி பேசுகின்றனர். தான் யார் என்று காட்ட வேண்டும் என்பதற்காக தான் தற்போது இங்கு வந்திருப்பதாக மாறன் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாக்கியலட்சுமி” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!