எதிர்பாரா விதமாக என்ட்ரி கொடுக்கும் மாறன் – பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இன்று வீட்டில் இருந்து அனைவரும் கிளம்ப வேண்டும் என்று மாசாணி மற்றும் வடிவு நாச்சியாரிடம் கூறுகின்றனர். பின்னர், இன்று யாரும் எதிர்பாரா வண்ணம் மாறன் என்ட்ரி கொடுக்கிறார்.
“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாசாணி மற்றும் வடிவு இருவரும் வீட்டினர் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லுகின்றனர். இதனை கேட்டு சரண்யா கோபம் அடைகிறார். இன்னும் சிறிது நாட்கள் இங்கு தான் இருக்க வேண்டும் என்றும், கொஞ்ச நாட்களுக்கு பிறகு தான் வீட்டை காலி செய்வோம் என்று கூறுகிறார். இதனை கேட்டு கொந்தளிக்கும் வடிவு நாச்சியார் மற்றும் அனைவரையும் கேவலமாக பேசுகிறார். வீட்டிற்கு ஐயரை வரவழைத்து பூஜைகளை செய்கின்றனர். இதனால் வேறு வழியின்றி அனைவரும் வீட்டை காலி செய்கின்றனர்.
விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடுவர் பென்னி தயால் – இதுதான் காரணம்!
வடிவு அனைவரின் பொருட்களையும் தூக்கி வீசுகிறார். இதனால் நாச்சியாருக்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. பின்னர், அனைவரும் சோகமாக வீட்டை விட்டு வெளியே செல்லுகின்றனர். அப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் மாறன் காரில் வருகிறார். அவரை பார்த்து விட்டு வடிவு மற்றும் மாசாணி இருவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மாறனை பார்த்து விட்டு சரண்யா, நாச்சியார், ஐஸ்வர்யா மற்றும் காயத்ரி என்று அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். வடிவு மற்றும் மாசாணி மாயன் தான் உடை மாற்றி விட்டு இது போல நடிக்கிறார் என்று நினைக்கின்றனர். அதனை கேட்கவும் செய்கின்றனர். ஆனால், வந்திருப்பது மாறன் என்று தெரிந்ததும் மாசாணி மிகவும் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். மாறன் வீட்டிற்குள் நுழைய போகும் போது மாசாணி அவரை தடுத்து, தாங்கள் அந்த வீட்டினை வாங்கி விட்டதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.