சொத்துகளை மாசாணியிடம் ஒப்படைக்கும் நாச்சியார் & மாயன் – இன்றைய எபிசோட்!

0
சொத்துகளை மாசாணியிடம் ஒப்படைக்கும் நாச்சியார் & மாயன் - இன்றைய எபிசோட்!
சொத்துகளை மாசாணியிடம் ஒப்படைக்கும் நாச்சியார் & மாயன் - இன்றைய எபிசோட்!
சொத்துகளை மாசாணியிடம் ஒப்படைக்கும் நாச்சியார் & மாயன் – இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாயன், மாசாணி தன்னை மிரட்டியதை பற்றி அனைத்தையும் கூறுகிறார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பல திரில்லர் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் இன்று மாயன் மற்றும் நாச்சியார் இருவரும் மாசாணி இந்த வீடு, நிலம் என்று தங்களிடம் உள்ள அனைத்தையும் கேட்டு மிரட்டியதாக கூறுகிறார். இதனை கேட்டு ஐஸ்வர்யா, சரண்யா மற்றும் காயத்ரி அனைவரும் அதிர்ந்து விடுகின்றனர். அனைத்து சொத்துக்களையும் கொடுக்க மாயன் முடிவு செய்திருப்பதாக நாச்சியார் கூறுகிறார்.

சந்தியாவை காணமால் தவிக்கும் சரவணன், இரவில் கொசுவத்தி வைத்து சிக்கிய பரிதாபம் – இன்றைய எபிசோட்!

இதனை கேட்டு கோபம் கொள்ளும் சரண்யா மாயன் மட்டும் எப்படி தனியாக இது குறித்து முடிவு செய்யலாம் என்று கேட்கிறார். இதனை கேட்டு கோபம் அடையும் நாச்சியார் இந்த குடும்பத்தில் இனி அனைத்து முடிவுகளை மாயன் மட்டுமே எடுக்க வேண்டும். இதனை அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். பின் நாச்சியார் காயத்ரி தனது தங்கையின் வாழ்விற்காக முத்துராசை கொலை செய்ததை நினைத்து பெருமை அடைகிறார்.

ஆனால், காயத்ரி திருமணம் முடிந்து வந்த போது தான் செய்த அனைத்தையும் யோசித்து பார்க்கிறார். அதிக அளவு காயத்ரியின் மனதினை காயப்படுத்தியதையும் உணர்ந்து காயத்ரியிடம் மன்னிப்பு கேட்கிறார். பின், இருவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு பேசுகின்றனர். பின்னர், மாசாணி மற்றும் வடிவு இருவரும் சொத்துக்களை வடிவின் பெயரில் மாற்றுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

சொத்து பத்திரங்கள் அனைத்திலும் கையெழுத்து போட மாசாணி மாயனிடம் கூறுகிறார். மாயன் வேறு வழி இல்லாமல் அனைத்து பத்திரங்களில் கையெழுத்து போடுகிறார். அவருக்கு பின்பாக நாச்சியார் வந்து கையெழுத்திடுகிறார். கையெழுத்து போடும் போது இருவரும் அழுகின்றனர். நாச்சியார் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் முன்பு சென்று அழுகிறார். அதனை பார்த்து விட்டு மஹா அவரை சமாதானம் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!