‘இறந்தது முத்துராசு இல்லை’ மறுக்கும் வடிவு, அதிர்ச்சியில் டிஎஸ்பி – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று முத்துராசு உடலை பற்றி கேட்க வடிவு மற்றும் மாசாணி இருவரையும் விசாரிக்க கார்த்தி வரவழைக்கிறார். முத்துராசு இறந்த அன்று நடந்த விஷயங்களை வீட்டினர் அனைவரும் தெரிந்து கொள்கின்றனர்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்
விஜய் டிவியில் தற்போது த்ரில்லிங் ஆன காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று காயத்ரி தான் முத்துராசை கொலை செய்ததாக ஒத்துக்கொள்கிறார். முத்துராசு கொலை நடந்த அன்று, காயத்ரி கொலை செய்ததும், சரண்யா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வந்து விடுகின்றனர். சரண்யா இருவரையும் தேற்றி வெளியே அழைத்து வருகிறார். மூவரும் சீக்கிரமாகவே தங்களது வீட்டிற்கு சரண்யாவின் காரில் வந்து விடுகின்றனர். இவர்களுக்கு பின்னர், மாயன் முத்துராசை பார்க்க வருகிறார். முத்துராசு இறந்து கிடப்பதை பார்த்ததும், அதிர்ந்து வீட்டிற்கு சென்று விடுகிறார்.
இதனை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ந்து விடுகின்றனர். அப்போது மாயன் இது குறித்து யாரும் வெளியே சொல்ல கூடாது என்றும் கூறுகிறார். வடிவு மற்றும் மாசாணி இருவரும் இறந்தது முத்துராசு தானா என்பதை உறுதி செய்ய செல்லகின்றனர். அப்போது வடிவு உடலை பார்த்து கதறி அழுகிறார். இதனால் மாசாணி அவரை சமாதானம் செய்து வெளியே அழைத்து வருகிறார். அப்போது மாயன் தனக்கும், மாசாணிக்கும் நடைபெற்ற உரையாடல் பற்றி யோசிக்கிறார். மாசாணி தான் முத்துராசு கொலை விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றால், தனக்கு அனைத்து சொத்துக்களும் வேண்டும் என்று மிரட்டுகிறார்.
அப்படி அனைத்து சொத்துக்களையும் தனக்கு தந்து விட்டால், முத்துராசு விஷயத்தில் தானும், தனது தங்கையும் தலையிட மாட்டோம் என்று கூறுகிறார். இதனை கேட்டு மாயன் அமைதியாகி விடுகிறார். பின்னர், வடிவிடம் கார்த்தி முத்துராசு உடல் குறித்து கூறுகிறார். அப்போது வடிவு அது தனது மகன் முத்துராசு கிடையாது என்று கூறுகிறார். இதனை கேட்டு மாயன் குடும்பத்தினர் மற்றும் கார்த்தி அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். அப்போது மாசாணி தான் வடிவிடம் பேசியதை யோசிக்கிறார். மாயன் குடும்பத்தினரிடம் இருந்து அனைத்து சொத்துக்களையும் முதலில் பறிக்க வேண்டும் என்றும், பின்னர் அவர்களை கஷ்டப்படுத்தி விட்டு மாயனை கொலை செய்து விட வேண்டும் என்றும், அதனால் நாளை முத்துராசு உடலை பார்த்த பின், அது முத்துராசு உடல் கிடையாது என்று போலீசாரிடம் கூற வேண்டும் என்று வடிவிடம் மாசாணி கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
முதலில், இதனை ஏற்க மறுக்கும் வடிவு பின்னர் சரி என்று கூறி விடுகிறார். அதே போல் போலீசாரிடம் கூறுகிறார். கார்த்தி வடிவிடம் அது முத்துராசின் உடல் இல்லையா என்று மீண்டும் கேட்கிறார். இல்லை என்று வடிவு மறுத்ததும், கோபம் அடையும் கார்த்தி நடுவில் எதோ நடந்து இருக்கிறது என்றும் அதற்கு என்னவென்று தான் கண்டுபிடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!