முத்தரசு பற்றிய உண்மையை மாயனிடம் சொல்ல வரும் ஐஸ்வர்யா – சூடுபிடிக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’!
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஐஸ்வர்யா முத்தரசு செய்யும் திருட்டு வேலைகளை எல்லாம் கண்டுபிடிக்கிறார். மேலும் அதனை மாயனிடமும் சொல்ல முயற்சிக்கிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர்:
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. முத்தரசன் வாழ்கை தன்னால் தான் கெட்டு விட்டதோ என்று நினைத்து அவரை திருமணம் செய்ய ஒத்துக்கொள்கிறார் ஐஸ்வர்யா. அதன் பிறகு தான் ஐஸ்வர்யாவிற்கு முத்தரசு பற்றிய உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.
TN Job “FB Group” Join Now
காயத்ரி இதிலிருந்து தப்பிக்க வைக்க தான் கத்தியை திருமணம் செய்து வைத்தார் மாயன். ஆனால் கடைசியில் இந்த நிலைமை வரும் என்று யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. முந்தைய எபிசோடில் கூட பீரோவில் எதையோ ரகசியமாக எடுப்பதை பார்த்த ஐஸ்வர்யாவிற்கு சந்தேகம் வர தக்க சமயம் பார்த்து காத்திருக்கிறார்.
தமிழகத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறுத்தம் – பொதுமக்கள் அதிர்ச்சி!
அப்பொழுது மாடிக்கு சென்று முத்தரசு குடித்து விட்டு வர பாக்கெட்டில் இருக்கும் சாவியை எடுத்து பீரோவை திறந்து பார்க்கிறார். அப்பொழுது காணாமல் போன நகை அங்கிருப்பதை பார்த்து ஷாக்காகிறார். இந்த வீட்டிற்கே துரோகம் நினைக்கும் இவனை சும்மா விடக்கூடாது என்று நினைத்து செயினை ஒளித்து வைக்கிறார்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
மாயன் வழக்கம் போல வாசலில் உட்கார்ந்திருக்க சரண்யாவை வம்புக்கு இழுக்கிறார். மேலும் ஐஸ்வர்யா மீது ஒரு பார்வை இருக்கட்டும் என்றும் கூறுகிறார். அதன் பிறகு ஐஸ்வர்யா அந்த செயினை மாயனிடம் எடுத்து வருகிறார். முத்தரசன் நான் நெனச்சதை விட மோசமானவன் என்று சொல்ல அதை தானே ஆரம்பத்தில் இருந்தே சொன்னேன் என்று சொல்கிறார் மாயன்.
நகையை காட்டும் நேரத்தில் முத்தரசனும், அவரது அம்மாவும் வந்து விட அதனை ஒளித்து வைக்கிறார். எப்படியோ அவர்களிடம் இருந்து சமாளித்து செல்கிறார் ஐஸ்வர்யா. அடுத்ததாக மகா தன் அப்பாவிடம் வந்து பேசும்படி சொல்கிறார். மாயனும் வீட்டிற்கு வர அவரது மாமா அடித்து துரத்துகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.