ட்விட்டர் நிறுவன ஊழியர்களுக்கு மஸ்கின் மாஸ் ஏற்பாடு – வீட்டிற்கே செல்ல தேவையில்லை!
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் செய்து வரும் மாற்றங்கள் அனைத்தும் ஊழியர்கள் உட்பட பொதுமக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
புதிய முயற்சி:
எலான் மஸ்க் செய்யும் அனைத்து செயல்களுமே மற்றவர்களை காட்டிலும் அதிகம் மாறுபட்டு இருக்கும். அந்த வகையில் எதிர்காலத்தில் இவை நடக்க கூடும் என்பது போன்ற விஷயங்களை மக்கள் கற்பனை செய்து கொண்டு இருக்கும் போதே அதை செய்து காட்டுபவர். வேற்று கிரகத்திற்கு மக்களை சுற்றுலா அனுப்ப இவரது திட்டம் சோதனை கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இவர் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் கைப்பற்றினார். அப்போது முதல் ட்விட்டர் நிறுவனத்தில் தொடர்ந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் மட்டுமல்லாமல் நிர்வாக ரீதியாகவும் பல் அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அதிரடியாக கிட்டத்தட்ட 3,700 பேரை பணிநீக்கம் செய்த மஸ்க், நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும், விருப்பமற்றவர்கள் விலகி கொள்ளலாம் என்று அவகாசம் கொடுத்தார்.
TNPSC Jailor 2022 தேர்வை வெல்ல – உங்களுக்கான Test Pack!! மிகக்குறைந்த விலையில்!!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், தற்போது புதிய முயற்சியாக அலுவலக பணியாளர்கள் பணி முடிந்து, அலுப்புடன் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு செல்ல வேண்டியதில்லை. அலுவலகத்தில் ஊழியர்கள் தூங்குவதற்காக சில அறைகளை மஸ்க் மாற்றியுள்ளார். இந்த முடிவு விநோதமாக இருப்பதாக மக்கள் மத்தியில் கருத்துக்களை பெற்று வருகிறது.