தமிழக அரசு இசை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
7 மாவட்டங்களில் செயல்படும் அரசு இசைப் பள்ளியில் 3 ஆண்டு பயிற்சிக்கான சேர்க்கை தற்போது நடைபெறுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலை பண்பாட்டுத்துறை:
தமிழகத்தில் கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக ஆன்லைன் முறையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து அரசு இசைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் செயல்படும் அரசு இசைப் பள்ளிகளில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டு பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சென்னை IIT எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ விண்ணப்ப பதிவு 2021 – இன்று முதல் தொடக்கம்!
ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். 13 முதல் 25 வயதுக்குள் இருக்கும் ஆண், பெண் மற்றும் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் சேர்வதற்கு பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.120 செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் சேருவோருக்கு மாதம் ரூ.400 வீதம், ஆண்டுக்கு 10 மாதங்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அக்.1 முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி – மத்திய அரசு!
மேலும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து பயணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த மேலும் விவரங்களை https://www.artandculture.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக அறிந்துகொள்ளலாம். அல்லது மாணவ மாணவிகள் அரசு இசைப் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அலுவலகத்தில் இது குறித்த விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளும்படி கூறப்படுகிறது என தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.