“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் மூர்த்தி? ரசிகர்கள் ஷாக்! முழு விவரம் இதோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது கதைக்களம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் சீரியலை விட்டு விலக இருப்பதாக தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் TRPயில் முன்னிலையில் இருக்கும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். அண்ணன் தம்பிகளின் பாசத்தை பற்றியும் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை பற்றியும் இந்த சீரியல் கதை உணர்த்துகிறது. அண்ணன் தம்பிகள் திருமணத்திற்கு பின் இருக்கும் வாழ்க்கையை எப்படி ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதே சீரியலின் மையக்கருத்தாக இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது பல திருப்பங்கள் வந்துள்ளது. அண்ணன் தம்பிகள் பிரியவே மாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் முல்லை மருத்துவ செலவிற்காக வாங்கிய கடனால் பெரிய பிரச்சனை வந்துள்ளது. அதனால் இரண்டாவது தம்பி கதிர் முல்லையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். அதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. அவருக்கு உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என டாக்டர் சொல்கின்றனர். அவரை பார்க்க வந்த கதிர் அப்போது கூட தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்.
CWC நிகழ்ச்சியை விட்டு விலகும் மணிமேகலை – வைரலாகும் வீடியோ! கவலையில் ரசிகர்கள்!
இப்படி பல சுவாரசியமான காட்சிகளுடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்டாலின் கலர்ஸ் தமிழில் பச்சைக்கிளி சீரியலில் நடிக்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த சீரியலை விட்டு அவர் விலக அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த புது சீரியலிலும் அண்ணனாக தான் நடிக்கிறார். அதாவது இரண்டு தம்பி, ஒரு தங்கையின் அண்ணனாக நடிக்கயுள்ளார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.