மூர்த்தி இடத்தில் இருந்து கடை வேலைகளை கவனிக்கும் தனம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் வைரல் வீடியோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார், மூர்த்தியும் ஒரு பக்கம் நெஞ்சுவலி வந்து வீட்டில் இருப்பதால் இனி கடை வேலைகளை தனம் கவனிக்க இருக்கிறார். தனம் வண்டியை எடுத்துக் கொண்டு கடைக்கு செல்லும் படப்பிடிப்பு தல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் சிகிச்சைக்கு வாங்கிய கடனால் வந்த பிரச்சனையால் கதிர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதனால் குடும்பத்தில் மனக்கஷ்டம் வர அதை தாங்கி கொள்ள முடியாமல் மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. அவரை மருத்துவமனையில் சேர்த்து ஆப்ரேசன் செய்ய இப்போது மூர்த்தி நலமுடன் இருக்கிறார். அவர் வீட்டிற்கு வர ஜீவா ஒரே ஆளாக கடை வேலைகளை கவனிக்க வேண்டிய நிலைமை வருகிறது. அதனால் பல வேலைகள் தடைபடுகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தனம் நான் இனிமேல் சென்று கடையை பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல மீனா மற்றும் ஐஸ்வர்யாவை ம் வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள சொல்கிறார். தனம் மூர்த்தியிடம் சொல்லிவிட்டு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று அங்கே எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். தனம் வேலை பார்க்கும் அழகை பார்த்து ஜீவா சந்தோசப்படுகிறார். எல்லா வேலைகளையும் மூர்த்தி இடத்தில் இருந்து தனம் பொறுப்புடன் கவனிக்கிறார்.
மறுபக்கம் கதிர் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார். அங்கே கடுமையாக வேலை இருக்கிறது. அதை எல்லாம் பார்க்காமல் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு வேலை செய்கிறார். இந்நிலையில் தனம் வண்டி ஓட்டிக் கொண்டு கடைக்கு செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்புத்தலத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.