கதிரை மன்னிக்கும் மூர்த்தி, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!
தனக்கு நெஞ்சுவலி வந்தபோது கூட கதிர் வீட்டிற்கு வரவில்லை என கதிர் மீது மூர்த்தி கோவமாக இருக்கிறார். ஆனால், தற்போது மூர்த்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக கதிர் மீதுள்ள கோவம் குறைந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் அடுத்தடுத்து தனது தொழிலில் முன்னேறி கொண்டே சென்று கொண்டிருக்கிறார். அதாவது, முல்லையின் செயற்கை கருவுறுதல் சிகிச்சைக்காக செலவு செய்த பணத்தை திருப்பி கொடுத்தே தீருவேன் என கதிர் சவால் விட்டு வந்திருக்கிறார். இதனால் முதலில் முல்லைக்கே தெரியாமல் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். பின்பு, முல்லையின் அம்மா கதிர் ஹோட்டலில் வேலை பார்த்து வந்ததை முல்லையிடம் கூறிவிட்டார்.
நமக்காக தானே கதிர் இவ்வளவு கஷ்டப்படுகிறார் என கதிரை நினைத்து முல்லை மிகவும் அழுகிறார். பின்பு, நாமே ஏன் சொந்தமாக ஹோட்டல் ஆரம்பிக்க கூடாது என முல்லை கதிருக்கு யோசனை கூறுகிறார். ஆனால், அதற்கு நிறைய செலவாகும் என கதிர் யோசிக்கும் நேரத்தில் முல்லை போட்டிருந்த அனைத்து நகைக்களையும் கதிருக்கு கொடுக்கிறார். தற்போது கதிரும் முல்லையும் சொந்தமாகவே ஹோட்டல் ஆரம்பித்துவிட்டனர். அந்த ஹோட்டல் திறப்பு விழாவிற்கு குடும்பத்தில் இருந்து சிலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் ஆர்டலி முறை ஒழிக்க எடுத்த நடவடிக்கை? உயர்நீதிமன்றம் உத்தரவு
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது வரைக்குமே கதிர் வீட்டை விட்டு சென்றதை மூர்த்தியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன் பேச்சை கேட்காமல் குடும்பத்தினரை கஷ்டப்படுத்திவிட்டு சென்றதால் மூர்த்தி கதிர் மீது கோவமாக இருக்கிறார். என்ன தான் கதிர் மீது மூர்த்திக்கு கோவம் இருந்தாலும் கதிரின் கடை திறப்பு விழாவிற்கு சென்றுவிட வேண்டும் என மூர்த்தி நினைக்கிறார். அதை அறிந்துகொண்ட கதிர் மூர்த்திக்கும் கடையில் இருந்து சாப்பாடு எடுத்து கொடுக்கிறார். அதை மறுக்காமல் மூர்த்தியும் வாங்கி கொள்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக கதிர் மீதுள்ள கோவம் மூர்த்திக்கு குறைந்து கொண்டே வருகிறது. எப்பொழுது கதிரை முழு மனதோடு மூர்த்தி மன்னிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.