கண்ணனின் விளையாட்டுத் தனத்தால் கோவப்படும் மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு டிரீட்மென்ட் செய்ய மூர்த்தி கடன் வாங்க அந்த பிரச்சனை எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கண்ணன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதை பார்த்து மூர்த்தி கோவப்படுகிறார். இவை எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசக் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. மூன்று அண்ணன்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகை கடையை கவனித்து கொள்ள அதன் மூலமாக தான் குடும்ப பொறுப்புகளை பார்க்கின்றனர். இந்நிலையில் கண்ணனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டு குடும்பத்தில் அனைவரும் கஷ்டப்பட்டு படிக்க வைக்க ஆனால் கண்ணன் திடீரென காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்தது.
Exams Daily Mobile App Download
ஆனால் அதை எல்லாம் மீறி பாசம் தான் பெரியது என தற்போது எல்லாரும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். கண்ணன் மட்டும் கல்யாணம் முடிந்தும் படிக்காமல் இருப்பதை மீனா குத்தி காட்டி பேச அதை தாங்க முடியாமல் ஐஸ்வர்யா தன்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வருகிறார். இதற்காக மாசம் ஒரு தொகையை மூர்த்தியிடம் வாங்கி கண்ணனை படிக்க வைக்கிறார். ஆனால் கண்ணன் இன்னும் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்.
மீண்டும் கர்ப்பமாகும் ஜெனி – கருவை கலைக்க சொல்லுவாரா செழியன்? சீரியலில் புதிய திருப்பம்!
இந்நிலையில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் இரவு வெளியே சுற்ற தொடங்கி இருக்கின்றனர். முதல் தடவை காசு இல்லாமல் வர ஜீவா உதவி செய்கிறார். ஆனால் அப்போதும் திருந்தாமல் மீண்டும் ஐஸ்வர்யாவை வெளியே அழைத்து சென்று போலீசில் சிக்கிக் கொள்கிறார். போலீஸ் வீட்டிற்கு வர ஜீவாவை மீண்டும் அழைக்கிறார். அப்போது மீனாவும் வர,அவருக்கு உண்மை தெரிய வருகிறது. மீனா மூலமாக மூர்த்திக்கு இந்த விஷயம் தெரிய வர அதனால் மூர்த்தி கண்ணன் மீது கோபப்படுகிறார்.