செப்.24 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மும்பை மாநகராட்சி அறிவிப்பு!
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் செயல்பாடுகளின் முக்கிய பகுதியாக வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை ஆயுதம், கத்திகள் எடுத்து செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.
ஆயுதங்களுக்கு தடை
கொரோனா நோய் தொற்று பரவலுக்கு மத்தியில், மும்பை மாநகரின் எல்லைப் பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பொதுமக்களின் செயல்பாடுகளுக்கு அரசு சில தடைகளை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது மஹாராஷ்டிரா காவல்துறை சட்டத்தின் கீழ், பிரிவு 37(1) (2), பிரிவு 2 (6) மற்றும் பிரிவு 10(2) ஆகியவற்றின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – குவியும் மக்கள் கூட்டம்!
இந்த உத்தரவின் கீழ், பொது மக்கள் ஆயுதங்கள், குச்சிகள், வாள்கள், ஈட்டிகள், உரிமம் இல்லாத துப்பாக்கிகள், கத்திகள் அல்லது ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு பொருளையும் எடுத்துச் செல்ல தடை செய்யப்படுகிறது. இது தவிர பொது இடங்களில் அறிவிப்புகளை செய்வது, பாடல்களை பாடுவது, இசைக் கருவிகளை வாசிப்பது, உரைகளை நிகழ்த்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
IND vs ENG 4வது டெஸ்ட் – இந்திய பவுலர்கள் அசத்தல்! இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
அதே நேரத்தில் பொது இடங்களில் பிளக்ஸ் அட்டை வைப்பது, மக்களுக்கு அறிவிப்பு பேப்பர்களை கொடுப்பது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வகையான தடைகள், ஆயுதம் ஏந்தியுள்ள அரசு ஊழியர்களாகிய காவலர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர தனியார் துறைகளில் பணிபுரியும் பாதுகாவலர்கள், கூர்காக்கள், வாட்ச்மேன்கள் ஆகியோர் ஆயுதங்கள், குச்சிகளை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.