மம்மிக்கும் கோபி Uncle-க்கும் தான் கல்யாணம்.. உண்மை தெரிந்து தலையில் இடி விழுந்தது போல் சரிந்த பாக்கியா!
பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் திருமணம் என தெரியாமல் பாக்கியா பார்த்து பார்த்து அனைத்து உணவுகளையும் சமைக்கிறார். இந்நிலையில் மயூ மூலமாக பாக்கியாவிற்கு விஷயம் தெரிய இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல விறுவிறுப்பான காட்சிகள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ராதிகா கோபி எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் திருமணத்திற்கு தயாராகி வருகின்றனர். கதைக்கு மேலும் சுவாரசியத்தை கூட்டுவது போல இவர்களின் திருமணத்தில் பாக்கியா சமைக்கிறார்.
தற்போது வரை பாக்கியாவிற்கு தான் யார் திருமணத்தில் சமைக்கிறோம் என்ற விஷயம் தெரியவில்லை. இந்நிலையில் பல முடிச்சுகள் இனி வரும் எபிசோடுகளில் அவிழ உள்ளன. அதாவது ராதிகாவின் குழந்தை மயூ தொண்டை வலி காரணமாக சூடு தண்ணீர் வேண்டும் என தன் பாட்டியிடம் கேக்கிறார். ஆனால் பாட்டியோ சமைக்கும் இடத்திற்கு சென்று கேட்டு வாங்கிக்கொள் என்கிறார்.
பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க கமல், விஜய் டிவியின் மாஸ்டர் பிளான் – தரமான சம்பவம் தான்!
Exams Daily Mobile App Download
இதனால் மயூ சமைக்கும் இடத்திற்கு செல்லும் போது தான் பாக்கியாவை பார்க்கிறார். அப்பொழுது தான் மயூ, மம்மிக்கும் கோபி Uncle-க்கும் தான் கல்யாணம் என்ற உண்மையை கூறுகிறார். இதை கேட்டதும் பாக்கியாவிற்கு தலையே சுற்றுகிறது. அது என்ன செய்வது என்றே தெரியாமல் நிற்கிறார். பாக்கியாவின் நிலையை நினைத்தால் நமக்கே சற்று கவலையாக தான் உள்ளது. பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று..
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்