டெல்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மும்பை – மோசமாகும் காற்றின் தரம்! தீவிர நடவடிக்கை!

0
டெல்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மும்பை - மோசமாகும்
டெல்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மும்பை - மோசமாகும்
டெல்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மும்பை – மோசமாகும் காற்றின் தரம்! தீவிர நடவடிக்கை!

சில ஆண்டுகளாக நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவது செய்திகளில் அதிக அளவு இடம்பிடித்து வரும் நிலையில், மும்பை இந்த பட்டியலில் முன்னிலை வகித்துள்ளது.

காற்றின் தரம்:

காற்று மாசுபாடு என்பது தற்போதைய நிலையில் அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. அதிக வாகன பயன்பாடு மற்றும் ஆலைகளின் மூலம் காற்றின் தரம் குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மக்கள் சுவாசிப்பதற்கு தகுதியற்ற காற்று தான் டெல்லியில் இருப்பதாக தேசிய காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதனால் அங்கு அடிக்கடி ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறை போன்றவை கடைபிடிக்கப்படுகிறது. மேலும், பொதுப்போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியை விட மும்பை நகரில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்து இருப்பதாக ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான டவர்களில் BSNL 5ஜி சேவை – வெளியான சூப்பரான தகவல்!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதாவது, டெல்லியில் தற்போது 259 ஆக காற்றின் தரம் உள்ளது, ஆனால் மும்பையில் 308 என்ற மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக, மோசமான காற்றின் காரணமாக மக்கள் அதிக அளவிலான சுவாச பிரச்சனை மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மும்பை அரசு காற்றின் தரம் மாசுபடுவதை தடுக்க தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!