IPL மெகா ஏலம்: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறிவைக்கும் வீரர்கள் யார்? யார்?
2022 ஆண்டின் ஐபிஎல் 2022 ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை BCCI வெளியிட்டது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியமான 9 வீரர்களை ஏலத்தில் எடுக்க குறிவைத்துள்ளது.
IPL மெகா ஏலம்:
IPL தொடரில் போட்டியிடும் பத்து அணிகள் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், மீதமுள்ள வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல கடந்த சில மாதங்களில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், அதில் சில முக்கிய வீரர்களை அணியில் சேர்க்க, அனைத்து அணிகளும் குறி வைக்கும் என்பதால் இரண்டு நாட்களும் ஐபிஎல் ஏலம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம் 1,214 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது 590 வீரர்கள் கொண்ட இறுதி பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது.
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கேப்டன் கூல் MS தோனி – கிராபிக் நாவல்! ரசிகர்கள் உற்சாகம்!
2021 ஆண்டு BCCI ஒரு அணி தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைக்க வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி 5 முறை IPL கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸும் நான்கு வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டது. ரோஹித் சர்மா 16 கோடிக்கும் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், கெய்ரோன் பொல்லார்ட் ஆகியோர் முறையே 12 கோடி, 8 கோடி மற்றும் 6 கோடிக்கு தங்கவைக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 48 கோடி ரூபாய்க்கு மீதம் உள்ளது. இதனை தொடர்ந்து வரும் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியமான 9 வீரர்களை ஏலத்தில் எடுக்க குறிவைத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – கல்வித்துறை ஆலோசனை!
மும்பை அணி ஏலத்தில் குறிவைத்துள்ள 9 வீரர்கள்: பேட்ஸ்மேன்கல் பட்டியலில் ,குயின்டன் டி காக், தேவ்தத் படிக்கல், ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர் பட்டியலில் மிட்செல் மார்ஷ் , ஷர்துல் தாக்கூர், ஆகிய இருவரும் மற்றும் பந்து வீச்சாளர்கள் ஹர்ஷல் படேல், டிரென்ட் போல்ட், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர் ஆகியோர் பட்டியலில் உள்ளனர். இந்த 9 வீரர்களை நடக்கவிருக்கும் மெகா ஏலத்தில் மும்பை அணி எடுக்க கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.